6 March 2014

மறைத்து வைக்கப்படும் நேசம்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...


சாந்தியும், சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து
தங்களை வந்தடையட்டும் சகோதர,சகோதரிகளே... :)


எனக்கு பின்னால் மாட மாளிகையை கட்டாதீர்கள்,
திரும்பி பார்க்காமலே நான் மரணித்து விடலாம். 

மாறாக, 

எனக்கு முன்னால் சிறு மணல் வீடு கட்டுங்கள்,
கலைந்து விட்டாலும், கண்டுகொண்ட மகிழ்ச்சி போதும். 

-யாரோ 

இவ்வாசகமானது,

அதிகமாகினும் மறைத்து வைக்கப்படும் நேசத்தின் பயனற்ற தன்மையையும்,

குறைவாகினும் வெளிப்படுத்தும் நேசத்தின் நிறைவையும் உணர்த்துகிறது.

28 January 2014

இவர்களையெல்லாம் உயிருடன் புதைத்து விடலாமா???


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...



தலைப்பை சூடாக்கி பதிவுக்கு இழுத்து வரும் வெற்று வார்த்தைகள் அல்ல இவை. அனுதினமும் ரணமாகிக் கொண்டிருக்கும் உள்ளங்களின் எதார்த்தமான கேள்வி.

துறவறம் என்றதும் உங்களுக்கு நினைவில் வருவதென்ன? ஏதேனும் ஒரு சாமியார்,பாதிரியார்,கன்னியாஸ்திரி இன்னும் இன்னும் சிலர்...

இவர்களின் இந்த துறவற வாழ்க்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என கேட்டால் அது அவர்களின் உரிமை என்பதையும் தாண்டி ஒரு இஸ்லாமியனாக மட்டுமல்ல, ஒரு மனிதனாகவும் மனித சமுதாயத்தை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் இயற்கைக்கு மாற்றமான இம்முறை ஏற்றுக் கொள்ள முடியாததே என்பேன்.

ஆனால், சிலர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவறத்தை எதிர்க்கும் நாம் பலர் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் துறவறத்தை பற்றி குறைந்த பட்சம் யோசித்ததாவதுண்டா??? வேறு வழியின்றி உணர்வுகளை உள்ளுக்குள்ளே புதைத்து வாழும் அவர்களை பற்றியும் சிந்திப்போம்.

10 December 2013

பயணத் தோழனை பாதுகாப்போம்

சிறியவர்
பெரியவர் 
என்று பாராமல் 

உயர்ந்தவன் 
தாழ்ந்தவன் 
என்று எண்ணாமல் 


ஏழை
செல்வந்தன் 
என்ற பாகுபாடின்றி 

என்னை தேடி 
வந்தோரின் வாழ்க்கையின் 
பயணத்தை பரவசமாக்குகிறேன். 

15 December 2012

கதையும்-படிப்பினையும் | புதிய பார்வை

             ஏக இறைவனின் திருப்பெயரால்



 ஒரு ரயில் பயணத்தில் தந்தையும்,அவரது 10 வயது மகனும் அவர்களின் எதிரே ஒரு வாலிபரும்  பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாலிபருக்கோ ஒரு ஆசை.இந்த ரம்மியமான பயணத்தில் தான் தேடி அலைந்து வாங்கிய, தனக்கு விருப்பமான அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்து விட வேண்டுமென்று எண்ணி படிக்கத் துவங்கினார். 

படிக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே ''அப்பா அது என்னப்பா?'' என்று ஒலித்தது ஒரு குரல். எதிரில் இருந்த சிறுவன்தான் அது

சிறுவனின் தந்தை ''அதுதான் செல்லம் புத்தகம்,அதில்  கதையெல்லாம் இருக்கும்.நான் உன்னை தூங்க வைக்க சொல்லுவனே, அது போல நிறைய கதைகள் இருக்கும்.

அந்த வாலிபர் ''10 வயது சிறுவனுக்கு புத்தகம் என்றால் என்னவென்று கூட தெரியாது போல'' என்று மனதிற்குள் எண்ணியபடியே படிப்பதை தொடர்ந்தார்.

4 November 2012

மாற்றுத் திறனாளியாக இருந்த நான் இனி உங்கள் சகோ ஹசனாக...

''மாற்றுத் திறனாளி'' என்ற பெயரை மாற்றி ''உங்கள் சகோ ஹசன்'' என்று வைத்திருக்கிறேன்.ஏன் இந்த மாற்றம் என்பதற்கான சிறு விளக்கம்தான் இப்பதிவு.

முதலில் என் அறிமுக பதிவில் என் பெயரயோ,என்னைப் பற்றிய வேறு தகவல்களயோ கூறாததற்க்கு இரண்டு காரணம் கூறி இருந்தேன்.

அதில் ஒன்று : 

எனது இணைய நண்பர்களுக்கு என் உடல் நிலை குறித்து தெரியாது.தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்பதால். 

29 October 2012

மனிதர்களை அவர்கள் மனம் மகிழும்படி அடையாளப்படுத்துங்கள்

A : ஏங்க இந்த ஏரியால இனியவன்-னு ஒருத்தர், அவரு வீடு எங்க இருக்கு-னு தெரியுமா?

B : இல்லைங்க தெரியாது

A : அவரு  பிரபல எழுத்தாளருங்க,நிறைய விருதுலாம் வாங்கி இருக்காருங்க 

B : அப்படியா! தெரியலைங்களே

A : (தயங்கியபடி) அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்ல 

B : அட அந்த கால் கொஞ்சம்,நடக்க முடியாம தடுமாறி நடப்பாரே அவர  சொல்லுறீங்களா?

A : அவர்தான்

B : இத முதல்லயே சொல்ல கூடாதா.... இப்புடியே நேரா போய் வலது பக்கம் திரும்புனீங்க-னா இரண்டாவது வீடு. 

17 October 2012

பில் கேட்ஸுக்கு ஒரு கடிதம்-அக்மார்க் மொக்கை

முன் குறிப்பு : இதை படித்து நீங்க கன்னாபின்னானு கடுப்பானா அதுக்கு கம்பெனி பொறுப்பேத்துக்காது.... :)



அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.