28 January 2014

இவர்களையெல்லாம் உயிருடன் புதைத்து விடலாமா???


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...



தலைப்பை சூடாக்கி பதிவுக்கு இழுத்து வரும் வெற்று வார்த்தைகள் அல்ல இவை. அனுதினமும் ரணமாகிக் கொண்டிருக்கும் உள்ளங்களின் எதார்த்தமான கேள்வி.

துறவறம் என்றதும் உங்களுக்கு நினைவில் வருவதென்ன? ஏதேனும் ஒரு சாமியார்,பாதிரியார்,கன்னியாஸ்திரி இன்னும் இன்னும் சிலர்...

இவர்களின் இந்த துறவற வாழ்க்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என கேட்டால் அது அவர்களின் உரிமை என்பதையும் தாண்டி ஒரு இஸ்லாமியனாக மட்டுமல்ல, ஒரு மனிதனாகவும் மனித சமுதாயத்தை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் இயற்கைக்கு மாற்றமான இம்முறை ஏற்றுக் கொள்ள முடியாததே என்பேன்.

ஆனால், சிலர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவறத்தை எதிர்க்கும் நாம் பலர் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் துறவறத்தை பற்றி குறைந்த பட்சம் யோசித்ததாவதுண்டா??? வேறு வழியின்றி உணர்வுகளை உள்ளுக்குள்ளே புதைத்து வாழும் அவர்களை பற்றியும் சிந்திப்போம்.